வேப்பூர் அருகே கள்ளசாரயம் விற்ற இருவர் கைது வேப்பூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

வேப்பூர் அருகே கள்ளசாரயம் விற்ற இருவர் கைது  வேப்பூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.


" alt="" aria-hidden="true" />


வேப்பூர் பகுதியில் கள்ளசாரயம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து 135 லிட்டர் சாரயத்தை பறிமுதல் செய்தனர்


கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள ஐவதகுடி ரயில்வே காலணியை சேர்ந்தவர் அமாவாசை மகன் அன்பழகன் (வயது 36) , இவர் திருச்சி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை சாலை பராமரிப்பு மற்றும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நகாய் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆவார் 
நேற்று வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் எஸ் சக்தி கணேஷ், மற்றும்  போலீசார்  சேப்பாக்கம்,  நகர் சந்திப்பு நான்கு வழி சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த ஆம்புலனஸ் டிரைவர் அன்பழகன் ஓட்டி  வந்த. டிஎன் 31 ஏ க்யூ 4164 
என்ற ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் லாரி டியூப்பில் சுமார் 120 லிட்டர் கள்ளசாரயம் இருந்தது அதை மடக்கி பிடித்த இன்ஸ்பெக்டர் கவிதா வேப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து கைது செய்தனர்


அதுபோல் வேப்பூர் அருகிலுள் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது -32 ) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகி ஆவார் இவர் அமமுக  சார்பில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நல்லூர் 17 நவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் இவர் நூதன முறையில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் கள்ளச்சாராயத்தை நிரப்பி ஒரு லிட்டர் 2 ஆயிரம் ரூபாய் என விற்றது தெரியவந்தது இது குறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்ஐ, சக்தி கணேஷ் , மற்றும் போலீசார் பூலாம்பாடி ஏரிக்கரையில் சாரயம் விற்று கொண்டிருந்த மணிகண்டனை கைது செய்தனர்
ஐவதகுடி அன்பழகன் , பூலாம்பாடி மணிகண்டன் ஆகிய இருவரிடமும் 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 135 லிட்டர் கள்ள சாரயத்தை பறிமுதல் செய்தனர் இதனால் வேப்பூர் பகுதியில் மிகவும்  பரபரப்பு ஏற்பட்டது.


Popular posts
பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி:
Image
காட்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்..
Image
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை
Image
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 2000 வாங்குவதற்கு சமூக இடைவெளி விட்டு பணம் பெற்று சென்ற நல்லம்பள்ளி கிராம மக்கள்
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 4 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
Image